பிரதமர் அலுவலகம்

மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்


உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார்

Posted On: 10 JUN 2021 2:36PM by PIB Chennai

மும்பை மேற்கு மலட் பகுதியில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

‘‘மும்பை மேற்கு மலட் பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன்இந்த சோகமான நேரத்தில், உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய நான் பிராத்திக்கிறேன்: பிரதமர் @narendramodi’’

உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தோருக்கு 50,000 ரூபாயும் கருணைத் தொகையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.

----

 

 



(Release ID: 1725962) Visitor Counter : 165