பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளர்ச்சிக்கு நீலப் பொருளாதாரம் எவ்வாறு மையமாக உள்ளது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 19 SEP 2025 1:59PM by PIB Chennai

வளம், நீடித்ததன்மை மற்றும் தேசிய வலிமை ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்தியாவின் வளர்ச்சிக்கு நீலப் பொருளாதாரம் எவ்வாறு மையமாக உள்ளது என்பது குறித்து மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுதிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். "சாகர்மாலா, ஆழ்கடல் திட்டம் மற்றும்  ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் போன்ற திட்டங்கள் மூலம் கடல் வளங்களைப் பயன்படுத்துவதையும், சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதையும், புதுமைகளை ஊக்குவிப்பதையும், உலகளாவிய கடல்சார் நிர்வாகத்தில் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்துவதையும் குறித்து அவர் எடுத்துரைக்கிறார்" என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் எக்ஸ் பதிவுக்கு  பதிலளித்து  பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:

"மத்திய இணையமைச்சர் @DrJitendraSingh, நீலப் பொருளாதாரம், வளம், நீடித்ததன்மை மற்றும் தேசிய வலிமையை இணைத்துஇந்தியாவின் வளர்ச்சிக்கு மையமாக உள்ளது என்று எழுதியுள்ளார். சாகர்மாலா, ஆழ்கடல் திட்டம் மற்றும்  ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் போன்ற திட்டங்கள் மூலம் கடல் வளங்களைப் பயன்படுத்துவதையும், சமூகங்களுக்கு அதிகாரமளிப்பதையும், புதுமைகளை ஊக்குவிப்பதையும், உலகளாவிய கடல்சார் நிர்வாகத்தில் இந்தியாவின் தலைமையை வலுப்படுத்துவதையும் குறித்து அவர் எடுத்துரைக்கிறார்."

***

(Release ID: 2168414)

SS/EA/RJ


(Release ID: 2168928)