பிரதமர் அலுவலகம்
அசாம் தேயிலைத் தோட்ட சமூகத்தினரின் கடின உழைப்புக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிடுமாறு சுற்றுலாப் பயணிகளை வலியுறுத்தியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAR 2024 2:15PM by PIB Chennai
அசாம் தேயிலை உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார். தேயிலைத் தோட்ட சமூகத்தினரின் மன உறுதி மற்றும் கடின உழைப்பை அவர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"அசாம் அதன் அற்புதமான தேயிலைத் தோட்டங்களுக்கு பெயர் பெற்றது, அசாம் தேயிலை உலகம் முழுவதும் பரவியுள்ளது.
அசாமின் கௌரவத்தை உலக அரங்கில் உயர்த்தும் வகையில் கடுமையாக உழைக்கும் தேயிலைத் தோட்ட சமூகத்தை குறிப்பாக நான் பாராட்ட விரும்புகிறேன்.
சுற்றுலாப் பயணிகள் அசாம் மாநிலத்திற்கு வருகை தரும்போது இந்த தேயிலைத் தோட்டங்களைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
***
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2013020)
வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam