பிரதமர் அலுவலகம்

அனைவரும் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம்: சச்சின் டெண்டுல்கரின் காஷ்மீர் பயணம் குறித்து பிரதமர் கருத்து

Posted On: 28 FEB 2024 2:25PM by PIB Chennai

சச்சின் டெண்டுல்கர் தமது காஷ்மீர் பயணம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"இதைப் பார்க்க இனிமையாக இருக்கிறது!  சச்சின் தெண்டுல்கரின் (@sachin_rt) அழகான ஜம்மு காஷ்மீர் பயணம் நமது இளைஞர்களுக்கு இரண்டு முக்கியமான அம்சங்களை வெளிப்படுத்துகிறது:

ஒன்று – வியக்கத்தக்க இந்தியாவின் (#IncredibleIndia) பல்வேறு பகுதிகளை அறிந்துகொள்வது

இரண்டு- இந்தியாவில் உற்பத்தி செய்வதன் முக்கியத்துவம்.

அனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவோம்!”

***

(Release ID: 2009738)

ANU/PKV/PLM/RS/KRS



(Release ID: 2009775) Visitor Counter : 68