பிரதமர் அலுவலகம்

மடகாஸ்கரின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஆண்ட்ரி ரஜோலினாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 02 DEC 2023 7:29PM by PIB Chennai

மடகாஸ்கர் நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஆண்ட்ரி ரஜோலினாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

“மடகாஸ்கர் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்ட்ரி ரஜோலினாவுக்கு (@SE_Rajoelina) மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-மடகாஸ்கர் கூட்டு ஒத்துழைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வை அடிப்படையிலான செயல்பாடுகளை வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.”

 

*******

ANU/AD/PLM/DL



(Release ID: 1981986) Visitor Counter : 67