பிரதமர் அலுவலகம்
தொலைநோக்குப் பார்வை கொண்ட கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்குப் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
21 NOV 2023 1:23PM by PIB Chennai
தொலைநோக்குப் பார்வை கொண்ட கண் மருத்துவரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"தொலைநோக்குப் பார்வை கொண்டவரும், கண் மருத்துவ நிபுணரும், சங்கர நேத்ராலயாவின் நிறுவனருமான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. கண் பராமரிப்பில் அவரது பங்களிப்பும் சமூகத்திற்கு அவரது இடைவிடாத சேவையும் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்துள்ளன. அவரது பணிகள் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
***
ANU/SMB/KASI/RR/KPG
(रिलीज़ आईडी: 1978456)
आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam