பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சந்தீப் டாங்கியின் வெண்கலப் பதக்க வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்

Posted On: 25 OCT 2023 4:36PM by PIB Chennai

 சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும் க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

"டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் - க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண திறமையும் அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்த வெற்றியால் இந்தியா மகிழ்ச்சியடைகிறது."

 

******

(Release ID: 1970864)

 

ANU/AD/SMB/KRS



(Release ID: 1971062) Visitor Counter : 102