பிரதமர் அலுவலகம்

ஆசிய பாரா விளையாட்டு 2022 ஆடவர் இரட்டையர் ரிகர்வ் பிரிவில் பாரா வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் சாஹில் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 25 OCT 2023 4:40PM by PIB Chennai

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் இரட்டையர் ரிகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பாரா வில்வித்தை வீரர்கள் ஹர்விந்தர் சிங் மற்றும் சாஹில் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் ரிகர்வ் - பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது பாரா வில்வித்தை வீரர்களான ஹர்விந்தர் சிங் மற்றும் சாஹில் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்களின் அபாரமான செயல்திறன் மற்றும் அம்புகளின் துல்லியம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் சாதனையை இந்தியா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறது’’.

 

*********** 

 

ANU/AD/PKV/KRS



(Release ID: 1971020) Visitor Counter : 94