பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள ஹேமியா கிராமத்திற்கு தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 12 MAY 2023 8:30PM by PIB Chennai

நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள ஹேமியா கிராமத்திற்கு தண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங்கின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

 

“இந்த நடவடிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும். எல்லைப் பகுதிகளின் மேம்பாட்டை நோக்கிய நமது முயற்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம் கிடைத்திருப்பதைக் காண்பது மன நிறைவாக உள்ளது. பல தசாப்தங்களாக உதாசீனப்படுத்தப்பட்டு வந்த நமது எல்லை பகுதிகளின் வளர்ச்சி தேவைகளுக்கு தற்போது தலையாய முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது”, என்று தெரிவித்தார்.

***

AD/SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1923876) வருகையாளர் எண்ணிக்கை : 204