பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திலிருந்து கட்ச் பிராந்தியம் மீண்டு பெரும் மாற்றமடைந்துள்ளதை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2023 10:59AM by PIB Chennai

2001 ஆம் ஆண்டு நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திலிருந்து கட்ச் பிராந்தியம் மீண்டு, தற்போது சிறந்த சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வினோத் சவ்தா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவை பிரதமர் திரு.நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:-

“கட்ச் குறித்த சிறந்த பதிவு 2001-ல் பயங்கர பூகம்பம் தாக்கியபோது கட்ச் பிராந்தியம் அழிந்து விட்டதாக மக்கள் கருதினர். ஆனால் அந்த மாவட்டத்தின் மக்கள் துயரத்திலிருந்து மீண்டெழுந்து, தங்கள் பகுதியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றனர். இன்று கட்ச் மிகச் சிறந்த சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

****



(Release ID: 1913726)

AP/PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 1913762) வருகையாளர் எண்ணிக்கை : 176