பிரதமர் அலுவலகம்

செப்டம்பர் 26, 2021 வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் நாட்டு மக்களுக்கு அழைப்பு

Posted On: 16 SEP 2021 10:01AM by PIB Chennai

செப்டம்பர் 26, 2021 வானொலியில் ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் 81-வது பதிப்பு நிகழ்ச்சிக்கான  தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பகிருமாறு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சிக்கான யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov  வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம்

இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டரில்,

 

வரும் 26-ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள இந்த மாதத்திற்கான மனதின் குரல் #MannKiBaat நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து பல சுவாரஸ்யமான யோசனைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. உங்களது யோசனைகளை NaMo செயலி அல்லது MyGov  வலைத்தளம் அல்லது 1800-11-7800 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்”, என்று கூறியுள்ளார்.



(Release ID: 1755358) Visitor Counter : 149