பிரதமர் அலுவலகம்
கிரிக்கெட்டில் வெற்றி மற்றும் தடுப்பூசியில் புதிய மைல்கல் ஆகிய இரண்டிற்கும் இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2021 10:09PM by PIB Chennai
தடுப்பூசி போடுவதிலும், கிரிக்கெட் மைதானத்திலும் இந்தியா குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.
இன்று, இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை மீண்டும் ஒரு கோடியைக் கடந்தது. இது கடந்த 11-நாட்களில் மூன்றாவது முறையாகும்.
கிரிக்கெட்டில், இந்தியா இன்று ஓவல் மைதானத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பிரதமர் தனது சுட்டுரைச் செய்தியில், “தடுப்பூசி செலுத்தும் பணியிலும், கிரிக்கெட் மைதானத்திலும் மீண்டுமொரு மிகச்சிறந்த நாள் இது. எப்போதும் போல இந்தியா வெற்றி பெற்றுள்ளது.#TeamIndiawins!#SabkoVaccineMuftVaccine”, என்று கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1752768)
வருகையாளர் எண்ணிக்கை : 223
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam