சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவின் கொவிட் பரிசோதனை 15 கோடியை கடந்தது: கடந்த 10 நாளில் 1 கோடி பேருக்கு பரிசோதனை

Posted On: 10 DEC 2020 10:35AM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா மற்றொரு சாதனை படைத்துள்ளது. கொரோனா பரிசோதனையின் மொத்த எண்ணிக்கை 15 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,22,959 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டின் மொத்த பரிசோதனை எண்ணிக்கை 15,07,59,726-ஆக உயர்ந்துள்ளது.

கடைசி ஒரு கோடி பரிசோதனைகள் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த விரிவான பரிசோதனை காரணமாக, கொவிட் பாதிப்பு  குறைந்து வருகிறது.

மற்றொரு சாதனையாக, கடந்த 11 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு எண்ணிக்கை 40,000க்கும் குறைவாக உள்ளதுகடந்த 24 மணி நேரத்தில்  31,521 பேர் மட்டுமே கொவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அதே நேரத்தில் 37,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்தற்போது நாட்டில்  3,72,293 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 3.81 சதவீதம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 92.5 லட்சத்தைக் (92,53,306) கடந்து விட்டது. குணமடைந்தோர் வீதம் 94.74 சதவீதமாக உள்ளதுகுணமடைந்தவர்களுக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து தற்போது 8,881,013-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக 500-க்கு கீழ் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679606

********

(Release ID: 1679606)



(Release ID: 1679626) Visitor Counter : 259