பிரதமர் அலுவலகம்

இன்றைய தற்சார்பு இந்தியா தொகுப்பு சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் உதவும் அரசின் முயற்சியின் தொடர்ச்சி-பிரதமர்

Posted On: 12 NOV 2020 9:55PM by PIB Chennai

 இன்று வெளியிடப்பட்ட தற்சார்பு இந்தியா தொகுப்பு, அனைத்து பிரிவினருக்கும் உதவுவதற்கான அரசின் முயற்சியின் தொடர்ச்சியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

திரு. நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’இன்றைய  தற்சார்பு இந்தியா தொகுப்பு, அனைத்து பிரிவினருக்கும் உதவுவதற்கான அரசின் முயற்சியின் தொடர்ச்சியாகும். இந்த முன்முயற்சியானது, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நலிவடைந்த  பிரிவினரை உயர்த்தவும், பணம் புழங்குவதை உறுதி செய்யவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும், மனை வணிகத் துறைக்கு வலுவூட்டவும், விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் உதவும்’’, என்று கூறியுள்ளார்.



(Release ID: 1672548) Visitor Counter : 164