நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் நிர்வாக நடைமுறைகளில் மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது – பொருளாதார ஆய்வறிக்கை

प्रविष्टि तिथि: 29 JAN 2026 2:00PM by PIB Chennai

அண்மை ஆண்டுகளில் வேளாண் சீர்திருத்த நடவடிக்கைகளை பல்வேறு மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. நிலம் சார்ந்த நிர்வாகம், சந்தை வாய்ப்புகள், நீர் மேலாண்மை, தொழில்நுட்பப் பயன்பாடு, பன்முகத்தன்மை கொண்ட பயிர் வகைகள் என பல்வேறு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் பண்ணை சார்ந்த செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆந்திரப்பிரதேச மறு ஆய்வுத் திட்டப் பணிகள் ட்ரோன் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை நிலம் சார்ந்த சொத்துக்களின் உரிமைகள் குறித்த டிஜிட்டல் ஆவணங்களை வெளியிடுவதற்கு உதவியாக அமைந்துள்ளது. 6,901 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் 81 லட்சம் நிலங்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு 86,000 நில அளவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2219949&reg=3&lang=1  **

TV/SV/KPG/EA

 


(रिलीज़ आईडी: 2220465) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam