பிரதமர் அலுவலகம்
இயற்கை விவசாயம் குறித்து தனது எண்ணங்களை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
03 DEC 2025 2:47PM by PIB Chennai
இயற்கை விவசாயம் குறித்த தனது எண்ணங்களை கட்டுரை மூலம் லிங்க்டுஇன் சமூக வலைதளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கோயம்புத்தூரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் பங்கேற்றது என் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டும் என்று மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் அது குறித்த தனது எண்ணங்களையும் இந்த சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டு வாரங்களுக்கு முன், கோயம்புத்தூரில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை குறித்த மாநாட்டில் பங்கேற்றது என் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். அது குறித்த எனது எண்ணங்களையும் லிங்க்டுஇன் வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். அதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
(Release ID: 2198106)
***
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2198483)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam