தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் சட்டங்களை எளிமையாகவும் சீராகவும் செயல்படுத்தும் வகையில் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது

Posted On: 21 NOV 2025 3:00PM by PIB Chennai

வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தொழிலாளர் ஊதியச் சட்டம் 2019, தொழில்துறை தொடர்புகள் சட்டம் 2020, சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்டம் 2020 ஆகியவை இன்று (21.11.2025) முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நான்கு  சட்டங்களாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் விதிகள் தொடர்பான ஒழுங்குமுறை விதிகளை நவீனமயமாக்குவது தொழிலாளர்களின் நலன்களை மேம்படுத்துவது, தொழிலாளர்களின் பணியிடச் சூழலை சீரமைப்பது போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த நான்கு புதியச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவிற்கான தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எதிர்காலத்திற்கு உகந்த வகையில், இந்தச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது (1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை) இயற்றப்பட்டவையாக இருந்தன.  அப்போது இருந்த நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் உலக அளவிலான தொழிலாளர்கள் சூழல் அமைப்புகள் வேறுபட்டு இருந்தன.

நாட்டின் நடைமுறையில் இருந்த 29 மத்திய தொழிலாளர் சட்டங்கள் சிக்கல் நிறைந்ததாகவும், பல்வேறு சட்டங்களாக சிதறுண்டதாகவும் தற்போதைய காலத்திற்கு  பொருந்தாத வகையிலும் இருந்ததால், அவை எளிமைப்படுத்தப்பட்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் நான்கு சட்டங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192463

***

AD/SV/KPG/KR


(Release ID: 2192598) Visitor Counter : 74