பிரதமர் அலுவலகம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் பிரதமரைச் சந்தித்தார்
Posted On:
18 AUG 2025 3:14PM by PIB Chennai
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். பொது வாழ்வில் அவரது நீண்ட கால சேவை மற்றும் பல்வேறு துறைகளில் அவர் பெற்ற அனுபவம் நமது தேசத்தை வளப்படுத்தும். அவர் எப்போதும் வெளிப்படுத்திய அதே அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் தேசத்திற்கான அவரது சேவை தொடரட்டும்.
@CPRGuv"
***
(Release ID: 2157448)
AD/EA/KR
(Release ID: 2157573)
Read this release in:
Telugu
,
Manipuri
,
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Kannada
,
Malayalam