சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

'அன்னையின் பெயரால் ஒரு மரம்' பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் 52 கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டுள்ளன

Posted On: 03 SEP 2024 9:50AM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், 'அன்னையின் பெயரால் ஒரு மரம்' பிரச்சாரத்தின் கீழ் மரம் வளர்ப்பதில் நாடு ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது என்றும், இந்தப் பிரச்சாரத்தின் கீழ் இந்தியா முழுவதும் 52 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2024 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் 'அன்னையின் பெயரால் ஒரு மரம்' பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத்திற்கான தமது தெளிவான அழைப்பில், இந்த முயற்சியின் மூலம் சிறந்த பூமி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

 

***

(Release ID: 2051130)
PKV/RR/KR



(Release ID: 2051182) Visitor Counter : 64