பிரதமர் அலுவலகம்

ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மசூத் பெசெஷ்கியானுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 06 JUL 2024 3:16PM by PIB Chennai

ஈரான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மசூத் பெசெஷ்கியானுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஈரான் அதிபராக நீங்கள் ( மசூத் பெசெஷ்கியான் - @drpezeshkian ) தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  வாழ்த்துகள். நமது மக்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் நலனுக்காக நமது நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதையும் உங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதையும் எதிர்நோக்கியுள்ளேன்."

***

PLM/KV

 



(Release ID: 2031229) Visitor Counter : 34