பிரதமர் அலுவலகம்

மக்களவை தலைவரின் கட்டுரைகள் நாடாளுமன்றம் எவ்வாறு "ஜனநாயகத்தின் இனிய மாண்பை” உருவாக்கியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர்

Posted On: 02 SEP 2023 7:31PM by PIB Chennai

நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லாவின் கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

எக்ஸ் சமூக ஊடக பதிவு ஒன்றில், பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது;

"மக்களவைத் தலைவர் திரு @ombirlakota ஜி அவர்களின் ஆழமான கட்டுரை. அனைத்து விதமான கருத்துகளையும் சம மரியாதையுடன் அரவணைப்பதன் மூலம் நாடாளுமன்றம் எவ்வாறு "ஜனநாயகத்தின் இனிய மாண்பை" உருவாக்கியுள்ளது என்பதை அவர் எடுத்துக்காட்டுகிறார். அதே நேரத்தில் அரசியலமைப்பு விழுமியங்கள், தேசிய நலன் மற்றும் பொது நன்மைக்காகவும் குரல் கொடுக்கிறார்”.

***

SM/PKV/KRS



(Release ID: 1954413) Visitor Counter : 82