பிரதமர் அலுவலகம்

உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்க பாடுபடும் அனைவருக்கும் பிரதமர் பாராட்டு

Posted On: 10 AUG 2023 10:00AM by PIB Chennai

உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் அர்ப்பணிப்பையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

"உலக சிங்க தினம் என்பது நமது இதயங்களை தங்கள் வலிமையாலும், பிரம்மாண்டத்தாலும் கவர்ந்த கம்பீரமான சிங்கங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகும். ஆசிய சிங்கங்களின் தாயகம் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கங்களின் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டுகிறேன். அவைகளை நாம் தொடர்ந்து போற்றிப் பாதுகாப்போம், அவை, வரும் தலைமுறைகளுக்கு செழித்திருப்பதை  உறுதி செய்வோம்.

---

ANU/AP/BR/KPG



(Release ID: 1947316) Visitor Counter : 121