பிரதமர் அலுவலகம்

கடத்தப்பட்ட கலைப்பொருட்களை திரும்ப ஒப்படைத்ததற்காக அமெரிக்காவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 19 JUL 2023 12:43PM by PIB Chennai

இந்திய பராம்பரியம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட 105 கலைப்பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது.

 

இந்திய பராம்பரியம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கடத்தப்பட்ட 105 கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்ததற்காக அமெரிக்காவுக்கு பிரதமர் திரு நரேந்திர  மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

 

வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்;

 

“இது ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்ச்சி அடையச் செய்யும். இதற்காக அமெரிக்காவுக்கு நன்றி. இந்த விலைமதிப்பற்ற கலைப் பொருட்கள் மகத்தான கலாச்சாரம் மற்றும் மத ரீதியான சிறப்பு கொண்டவையாகும். இவை மீண்டும் நாடு திரும்பியிருப்பது நமது பாரம்பரியம் மற்றும் வளமான வரலாற்றை பாதுகாக்கும், நமது உறுதிபாட்டிற்கு அத்தாட்சியாகும்”

***


(Release ID: 1940645)

LK/IR/KPG/RR



(Release ID: 1940680) Visitor Counter : 144