பிரதமர் அலுவலகம்
ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையுடன் பிரதமரின் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
24 JUN 2023 7:27AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆல்ஃபாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை ஜூன் 23 அன்று வாஷிங்டன் டிசி-யில் சந்தித்தார்.
செயற்கை நுண்ணறிவு, நிதிநுட்பம், இணையவெளி பாதுகாப்பு உற்பத்தி மற்றும் சேவைகள், இந்தியாவில் மொபைல் சாதன உற்பத்தி ஆகிய தளங்களில் ஒத்துழைப்பதற்கான கூடுதல் வழிகளை ஆராய திரு சுந்தர் பிச்சையை அழைத்திருந்தார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதில் கூகுள் மற்றும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு பற்றியும் பிரதமரும், திரு பிச்சையும் விவாதித்தனர்.
***
AD/PKV/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1934988)
வருகையாளர் எண்ணிக்கை : 191
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam