பிரதமர் அலுவலகம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே கர்பா நடனம் பிரபலமடைந்து வருவது குறித்துப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 04 OCT 2022 3:51PM by PIB Chennai

விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்துப், பிரதமர் வெளியிட்ட  ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

"விளையாட்டுப் போட்டிகள் சுவாரசியமானவை, ஏனெனில் அவை வீரர்களுக்குப்  பல்வேறு கலாச்சாரத்தைக் கொண்டவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போரிடையே  கர்பா நடனம் பிரபலமடைந்து வருவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது."

*****



(Release ID: 1865143) Visitor Counter : 153