பிரதமர் அலுவலகம்
திரு சைரஸ் மிஸ்திரியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2022 6:06PM by PIB Chennai
திரு சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது நம்பிக்கை கொண்ட அவர் ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலதிபராக திகழ்ந்தார் என்று திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"திரு சைரஸ் மிஸ்திரியின் அகால மறைவு அதிர்ச்சியளிக்கிறது. அவர் இந்தியாவின் பொருளாதார வலிமையில் நம்பிக்கை கொண்ட ஒரு பெரும் நம்பிக்கைவூட்டும் தொழிலதிபராக திகழ்ந்தார். அவரது மறைவு வர்த்தகம் மற்றும் தொழில் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்."
**************
(வெளியீட்டு அடையாள எண்: 1856680)
வருகையாளர் எண்ணிக்கை : 166
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam