பிரதமர் அலுவலகம்

பிரபல இலக்கியவாதி டாக்டர் ரஜத் குமார் கர் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 08 MAY 2022 10:01PM by PIB Chennai

பிரபல இலக்கியவாதி டாக்டர் ரஜத் குமார் கர் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில்,

டாக்டர் ரஜத் குமார் கர், கலாச்சார உலகில் மிகவும் பிரசித்தி பெற்றவராக இருந்தார். ரத யாத்திரையை காலவரிசைப்படுத்தியது,  பல்வேறு தலைப்புகளில் எழுதியது, பாலா கலையை புதுப்பிக்க பணியாற்றியது முதலியவற்றில் அவரது பன்முக ஆளுமை காணப்பட்டது. அவரது மறைவினால் மிகவும் துயரடைந்தேன். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

-----



(Release ID: 1823932) Visitor Counter : 148