பிரதமர் அலுவலகம்

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 APR 2022 9:37AM by PIB Chennai

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் திரு.நரேந்திரமோடி, மக்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.  பகவான் மகாவீரரின் போதனைகள், குறிப்பாக, அமைதி, கருணை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை திரு.மோடி நினைவுகூர்ந்துள்ளார். 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; 

“மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துக்கள்.

பகவான் மாகவீரரின் போதனைகள் மற்றும் அவர் வலியுறுத்திய  ஜீவ காருண்யம் போன்றவை, கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க உதவும். 

பகவான் மகாவீரரின் ஆசிகள்,  நமது சமுதாயத்தில் அமைதி மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கச் செய்யட்டும்“ என்று தெரிவித்துள்ளார்.  

*****



(Release ID: 1816705) Visitor Counter : 171