பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் தனித்துவமான கொண்டாட்டம் மாதவ்பூர் மேளா என பிரதமர் பெருமிதம்

प्रविष्टि तिथि: 10 APR 2022 1:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் தனித்துவமான கொண்டாட்டம் மாதவ்பூர் மேளா என்று  தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டதை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

மாதவ்பூர் மேளா தொடங்கியுள்ள நிலையில், கடந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த தனித்துவமான இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் எழுச்சியைப் பறைசாற்றும் கொண்டாட்டத்தைப் பற்றி கூறியதை பகிர்ந்துள்ளேன்.’’

விழாவின் கருப்பொருள் மற்றும் மகிழ்ச்சிகரமான எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில், குஜராத் சுற்றுலா துறை வெளியிட்டுள்ள டுவிட்டரையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

******


(रिलीज़ आईडी: 1815411) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam