பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இணைய வழி உச்சி மாநாடு

प्रविष्टि तिथि: 16 FEB 2022 7:00PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடியும், அபுதாபியின் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ராணுவத்தின் துணைத் தளபதி ஷேக் முகமது பின், சயீத் அல் நஹ்யானும் 2022 பிப்ரவரி 18 அன்று இணைய வழி உச்சி மாநாடு நடத்த உள்ளனர்.

இந்தியா அதன் 75-வது சுதந்திர ஆண்டு பெருவிழாவையும், ஐக்கிய அரபு அமீரகம் அதன் உருவாக்கத்தின் 50-வது ஆண்டினையும் கொண்டாடும் தருணத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவையும் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்களின் தொலைநோக்குப் பார்வையையும் இரு தலைவர்களும் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி இரு தலைவர்களும் விவாதிப்பார்கள், கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 3.5 மில்லியன் இந்திய சமூகத்தினர் உள்ளனர். பெருந்தொற்றுக் காலத்தில் இந்திய சமூகத்தினருக்கு ஆதரவு அளிப்பதற்காக ஐக்கிய அரபு அமீரக தலைமைக்கு இந்தியாவின் பாராட்டைப் பிரதமர் தெரிவித்தார். அமீரகத்தின் வளர்ச்சியில் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பை அதன் தலைவரும் பாராட்டினார்.

***


(रिलीज़ आईडी: 1799261) आगंतुक पटल : 146
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam