பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

2022 பிப்ரவரி 27-ல் ஒளிபரப்பாகவுள்ள மன் கி பாத் நிகழ்ச்சிக்கு கருத்துக்களை தெரிவிக்குமாறு மக்களுக்கு பிரதமர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2022 3:10PM by PIB Chennai

2022 பிப்ரவரி மாதம் 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் வழங்குமாறு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ இந்த மாதம் மனதின் குரல் நிகழ்ச்சி 27-ந்தேதி ஒளிபரப்பாகவுள்ளது. எப்போதும் போல, அதற்கு உங்களது ஆலோசனைகளைப் பெறுவதற்கு  ஆவலாக உள்ளேன். மைகவ், நமோ செயலியில் எழுதுங்கள் அல்லது 1800-11-7800 என்ற எண்ணில் அழைத்து உங்கள் செய்தியை பதிவு செய்யுங்கள்.’’

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1798077) வருகையாளர் எண்ணிக்கை : 231