பிரதமர் அலுவலகம்

சமூக சேவகரும் பத்ம விருது பெற்றவருமான சாந்தி தேவி அவர்களின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 17 JAN 2022 5:59PM by PIB Chennai

பிரபல சமூக சேவகரும் பத்ம விருது பெற்றவருமான திருமதி சாந்தி தேவி அவர்களின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமரின் பதிவு :

“சாந்தி தேவி அவர்கள் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குரலாக நினைவுகூரப்படுவார் துயரங்களைக் களைந்து ஆரோக்கியமான நீதி நெறியுள்ள சமூகத்தை உருவாக்க அவர் ஓய்வில்லாமல் உழைத்தார். அவரது மறைவால் துயரடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆறுதல்கள். ஓம் சாந்தி”.

*************** 



(Release ID: 1790541) Visitor Counter : 212