பிரதமர் அலுவலகம்

எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 01 DEC 2021 10:13AM by PIB Chennai

எல்லைப் பாதுகாப்புப் படையின் தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     “எல்லைப் பாதுகாப்புப் படை தொடக்க தினத்தையொட்டி, எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள். எல்லைப் பாதுகாப்புப் படை அதன் தைரியம் மற்றும் தொழில்முறைக்காக பரவலாக மதிக்கப்படுகிறது. இயற்கைப் பேரிடர்கள் மற்றும் நெருக்கடியான தருணங்களின் போது, நமது குடிமக்களைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.!” என்று பிரதமர் தது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

***

 (Release ID: 1776671)



(Release ID: 1776703) Visitor Counter : 158