பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

Posted On: 04 NOV 2021 3:41PM by PIB Chennai

பாரத் மாதாகி ஜே !

பாரத் மாதாகி ஜே !

பாரத் மாதாகி ஜே !

இன்று புனித தீபாவளி பண்டிகை நாளாகும். ஒவ்வொருவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளி கொண்டாட விரும்புகிறார்கள். நானும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் ஒவ்வொரு முறையும் எனது குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாட நான் வருகிறேன், ஏனெனில் நீங்கள் தான் எனது குடும்பம். உங்கள் குடும்பத்தில் நான் ஓர் உறுப்பினராக இருக்கிறேன். ஒரு பிரதமராக நான் இங்கு வந்திருக்கவில்லை, உங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவராக நான் வந்திருக்கிறேன். அரசியலமைப்பு சட்டப்படியான பொறுப்பில் உள்ள எனது  முந்தைய ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது என்னைப் பொருத்தவரை எனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடுவது போன்ற அதே உணர்வை ஏற்படுத்துவதாகும். இதனால்தான் அரசியல் சட்டப்படியான பதவியை ஏற்றுக்கொண்டபின் எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் அனைத்து தீபாவளி நாளையும் நான் கொண்டாடுகிறேன். உங்களைச் சந்திக்க நான் தனியாக வந்திருக்கவில்லை, 130 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களுடன் வந்திருக்கிறேன். ராணுவ வீரர்களான உங்களை வாழ்த்துவதற்கு இன்று மாலை ஒவ்வொரு இந்தியரும் ஒரு அகல் விளக்கை ஏற்றிவைப்பார்கள். அவை உங்களை வாழ்த்தும்.  நாட்டின் பாதுகாப்பு கேடயமாக ராணுவ வீரர்கள் வாழ்கிறார்கள். நாட்டின் தீரம் மிக்க புதல்வர்களாகவும், புதல்விகளாகவும் நாட்டிற்கு சேவை செய்வது நல்ல வாய்ப்பு.  அனைவருக்கும் இது கிடைப்பதில்லை.

தாய்நாட்டை பாதுகாப்பதற்கு உச்சபட்ச தியாகம் செய்த நவ்ஷேராவின் நாயகர்களான பிரிகேடியர் உஸ்மான், நாயக் ஜதுநாத் சிங் ஆகியோருக்கு நான் மதிப்புமிகு அஞ்சலி செலுத்துகிறேன். மனஉறுதிக்கும், நெஞ்சுரத்திற்கும், தேச பக்திக்கும் முன் எப்போதும் காணாத உதாரணங்களாக விளங்கும் லெப்டினன்ட் ஆர்.ஆர்.ரானே மற்றும் இதர தீரம்மிக்கவர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறேன். ராணுவத்தை உறுதியுடன் ஆதரித்த திரு பல்தேவ் சிங், திரு பசந்த் சிங் ஆகியோரின் வாழ்த்துக்களைக் கொண்டதாக எனது  உணர்வுகள் இருக்கின்றன. துல்லியத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பங்களிப்புக்காக இங்கு முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களுக்கு எனது பாராட்டுக்கள். இந்தத் தாக்குதலிலிருந்து பாதுகாப்புடன் ராணுவ வீரர்கள்  திரும்பி வந்தது எனக்கு நிம்மதி தரும்  தருணமாக இருந்தது.

நண்பர்களே,

நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பாக உள்ளது சுதந்திரத்தின் ‘75வது ஆண்டு காலத்தில்’ தனது திறன்கள் மற்றும் வளங்கள் பற்றி இன்றைய இந்தியா விழிப்புடன் இருக்கிறது.

வெளிநாடுகளை சார்ந்திருப்பது பாதுகாப்புத் தளவாடங்களுக்கு, பற்றி முந்தைய காலத்தில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், இன்று பாதுகாப்பு ஆதார வளங்களில் அதிகரிக்கும் சுயசார்பு இந்தியா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டில் 65 சதவீதம் நாட்டுக்குள்ளேயே பயன்படுத்தப்படுகிறது. ராணுவத் தளவாடங்கள் பட்டியலில் இருக்கும் 200 பொருட்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்; இந்தப் பட்டியல் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

நண்பர்களே,

பழைய ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் தற்போது தனிச்சிறப்பான தளவாடங்களையும் வெடிபொருட்களையும் தயாரிப்பவையாக மாறியுள்ள நிலையில் விஜயதசமி அன்று தொடங்கப்பட்டுள்ளன; 7 புதிய பாதுகாப்பு தொழில்நிறுவனங்கள். பாதுகாப்புத் தளவாடங்களைக் கொண்டுசெல்வதற்கான தனிப்பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இளைஞர்கள் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய தொழில்களில் ஆர்வம் காட்டுகின்றனர். பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியாளர் என்ற முறையில் இவை அனைத்தும் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும்.

மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தின் அதிகார தேவை விரிவுபடுத்தப்படவும் மாற்றப்படவும் வேண்டும். விரைவாக மாறிவரும் தொழில்நுட்ப நிலைமை புதிய மாற்றங்களைக் கோருகிறது. இதனால் ஒருங்கிணைந்த ராணுவ தலைமைத்துவத்தின் ஒத்துழைப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாக உள்ளது. முப்படைகளின் தளபதி மற்றும் ராணுவ விவகாரங்கள் துறை ஆகிய நடவடிக்கைகள் இந்த திசையில் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல்  எல்லைப்பகுதியில் புதிய கட்டமைப்பு நாட்டின் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.  எல்லைப்பகுதிகளில் லடாக் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரை, ஜெய்சல்மார் முதல் அந்தமான் நிக்கோபார் வரை போக்குவரத்து தொடர்பில் நவீன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது: இது ராணுவ வீரர்களுக்கு முன் எப்போதும் இல்லாத அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் வசதிக்கும் வழிவகுத்துள்ளது.

நண்பர்களே,

நாட்டின் பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்பு புதிய உச்சங்களை தொட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கப்பற்படை, மற்றும் விமானப்படையில் முன்னணியில் அவர்களைப் பணியமர்த்தியபின் தற்போது ராணுவத்திலும் கூட பெண்களின் பங்கு விரிவாக்கப்படுகிறது. எனது சுதந்திர தின அறிவிப்பின்படி, நிரந்தர ஆணையம், தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம், தேசிய ராணுவப்பள்ளி, மகளிருக்கான இந்திய தேசிய ராணுவக்கல்லூரி ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கான ராணுவப்பள்ளியும் திறக்கப்படும்.

நண்பர்களே,

ராணுவப் படைகளில் எல்லையில்லாத திறன்களைக் காண்பது மட்டுமின்றி ஊசலாட்டம் இல்லாத சேவை உணர்வையும் வலுவான உறுதியையும் ஒப்பிட இயலாத உணர்வையும் காண முடிகிறது. இது இந்திய ராணுவத்தை உலக ராணுவத்திற்கிடையே ஒப்பற்றதாக மாற்றுகிறது. இந்திய ராணுவம் தொழில் ரீதியாக உலக ராணுவப் படைகளிலேயே உயர்ந்த இடத்தில் உள்ளது, ஆனால் அதன் மனித மான்புகள் அதனைத் தனித்துவமானதாகவும் அசாதாரணமானதாகவும் மாற்றியிருக்கிறது. உங்களைப்பொருத்தவரை இந்தப் பணி வெறும் ஊதியத்திற்கானதல்ல உங்களைப்பொருத்தவரை இது ஒரு தொழில், ஒரு வழிபாடு, இந்த வழிபாட்டில் 130 கோடி மக்களின் உணர்வை நீங்கள் முறைப்படுத்துகிறீர்கள். பேரரசுகள் வரும், போகும். ஆனால் இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது இன்றும் இருக்கிறது, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் அது நிலைத்திருக்கும்.  நாட்டினை அரசாகவோ, அதிகாரமாகவோ, அல்லது பேரரசாகவோ நாம் உணரவில்லை, நம்மைப்பொருத்தவரை இது வாழ்க்கைமுறை ஆன்மாவின் இருத்தல், இதனைப் பாதுகாப்பது புவியியல் ரீதியான எல்லைகளைப் பாதுகாப்பது என்ற வரம்போடு நின்றுவிடவில்லை, நம்மைப்பொருத்தவரை தேசப்பாதுகாப்பு என்பதன் பொருள் தேசத்தின் துடிப்பை, தேசத்தின் ஒற்றுமையை, தேசத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகும்.

விண்ணைத்தொடும் வீரத்துடன் நமது ராணுவ வீரர்கள் இருந்தாலும் அவர்களின், இதயங்கள் கடல்போன்ற மனிதகுல இரக்கத்தையும் கொண்டிருக்கின்றன. இதனால்தான் நமது ராணுவ வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி, இயற்கைச் சீற்றம் மற்றும் பேரழிவு காலங்களில் உதவிசெய்ய எப்போதும் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இது வலுவான நம்பிக்கையை வளர்த்துவருகிறது இந்தியாவின் ஒற்றுமை, உறுதிப்பாடு ஆகியவற்றின் பாதுகாவலர்களாகவும் ‘ஒரே இந்தியா, உன்னத இந்தியா’ என்ற உணர்வு கொண்டவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது வீரத்தால் உந்தப்பட்டு இந்தியாவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் உச்சத்திற்கு  கொண்டுசெல்வோம் என்பதில் நான் முழுமையான நம்பிக்கையோடு இருக்கிறேன்.

நண்பர்களே,

உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். உங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்வாழ்த்துக்கள். உங்களைப்போன்ற தீரம்மிக்க புதல்வர்களையும், புதல்விகளையும் ஈன்றெடுத்த தாய்மார்களை நான் வணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் முழு ஆற்றலுடன் பாரத் மாதாகி ஜே ! என்று கூறுங்கள். பாரத் மாதாகி ஜே ! பாரத் மாதாகி ஜே !

நன்றி !

****



(Release ID: 1769562) Visitor Counter : 154