பிரதமர் அலுவலகம்

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் நலனைப் பாதுகாக்கும் அசாம் குழுவினரின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 23 SEP 2021 4:22PM by PIB Chennai

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் நலனைப் பாதுகாக்கும் அசாம் குழுவினரின் நடவடிக்கைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவின் பெருமை என்று குறிப்பிட்டு, அவற்றைப் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

அசாம் முதல்வர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் சுட்டுரைச் செய்திக்கு பிரதமர் அளித்த பதிலில்,

அசாம் குழுவினரின் நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், இந்தியாவின் பெருமை என்பதால், அவற்றின் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்”, என்று தெரிவித்தார்.

*****



(Release ID: 1757313) Visitor Counter : 215