பிரதமர் அலுவலகம்

கோவாவில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோசை 100% பேருக்கு செலுத்தியதற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 10 SEP 2021 8:48PM by PIB Chennai

கோவா மக்கள் தொகையில் தகுதிவாய்ந்த 100% பேருக்கும் கொவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோசை செலுத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி கோவாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்தின் சுட்டுரைச் செய்தியைப் பகிர்ந்து, “பாராட்டுக்கள் கோவா! மருத்துவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களின் கூட்டு மனநிலை மற்றும் வலிமையுடன் கூடிய மிகச் சிறந்த முயற்சி”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

**************



(Release ID: 1754120) Visitor Counter : 159