பிரதமர் அலுவலகம்

பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நார்வாலுக்கு பிரதமர் பாராட்டு

Posted On: 04 SEP 2021 10:01AM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மனீஷ் நார்வாலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து புகழ் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இளம் மற்றும் பிரமாதமான திறமையாளர் மனீஷ் நார்வாலின் மிகப்பெரும் சாதனை. அவர் தங்கப் பதக்கம் வென்றது, இந்திய விளையாட்டுத் துறைக்கு ஓர் சிறப்பான தருணமாகும். அவருக்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.

*****************

 



(Release ID: 1751975) Visitor Counter : 237