பிரதமர் அலுவலகம்

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவுக்கு பிரதமர் பாராட்டு


இந்திய பொருளாதார அமைப்பில், இது ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 30 JUN 2021 2:38PM by PIB Chennai

ஜிஎஸ்டி 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை, பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது இந்திய பொருளாதார அமைப்பில் மைல்கல்லாக இருந்து வருகிறது என்றும் பிரதமர் கூறினார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் பொருளாதார அமைப்பில்   ஜிஎஸ்டி, ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது வெளிப்படைத்தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும் அதே வேளையில், சாதாரண மனிதர்கள் மீதான வரிகள்இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது.

# 4YearsofGST’’ என குறிப்பிட்டுள்ளார்.

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1731445) வருகையாளர் எண்ணிக்கை : 355