பிரதமர் அலுவலகம்

திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 28 APR 2021 9:11AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, சிறந்த கல்வியாளரும். பிரபலமான எழுத்தாளருமான திரு.மனோஜ் தாஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “திரு.மனோஜ் தாஸ் சிறந்த கல்வியாளரும், புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆவார். அவர் ஆங்கில மற்றும் ஒடியா இலக்கியத்திற்கு அரும்பங்காற்றியுள்ளார். திரு.அரவிந்தரின் தத்துவத்தை கடைபிடித்து முன்னிலைப்படுத்தினார். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”.

 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1714503) வருகையாளர் எண்ணிக்கை : 230