சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

58 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று

Posted On: 05 JAN 2021 11:32AM by PIB Chennai

இங்கிலாந்தில்  ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால், இந்தியாவில் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தனி அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். இவர்களின் நெருங்கிய உறவினர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து இன்று 2,31,036 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 2.23 சதவீதம் ஆகும்

கடந்த 39 நாட்களாக, தினசரி குணமடைவோர் எண்ணிக்கை, தினசரி பாதிப்பை விட அதிகமாக உள்ளதுகடந்த 24 மணி நேரத்தில் 29,091 குணமடைந்துள்ள நிலையில், 16,375 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,96,236 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியை (99,75,958) நெருங்குகிறது. இதனால் குணமடைந்தோர் வீதம் 96.32 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மகாராஷ்டிராவில் 4,875 பேருக்கும், கேரளாவில் 3,021 பேருக்கும், சட்டீஸ்கரில் 1,147 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதுகடந்த 24 மணி நேரத்தில், 201 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686181

************



(Release ID: 1686242) Visitor Counter : 157