பிரதமர் அலுவலகம்

குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 08 DEC 2020 10:48PM by PIB Chennai

குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

திரு.மோடி பகிர்ந்துள்ள தொடர் டுவிட்டர் பதிவுகளில், “டிசம்பர் 5 ஆம் தேதியன்று வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய சட்டப் பேரவை தேர்தல்களை அடுத்து, குவைத் நாட்டின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபாவுக்கு எனது அன்பான நல்வாழ்த்துகள்.

குவைத் மன்னரான மேதகு ஷேக் நவாஃப் அல்-அகமது அல்-ஜபீர் அல்-சபாவின் தொலைநோக்கு தலைமையின் கீழ், மிகச் சிறப்பான நமது இருதரப்பு உறவுகள் மென்மேலும் செழித்தோங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

***



(Release ID: 1679294) Visitor Counter : 103