பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ருவாண்டாவின் தலைவர் எச்.இ. பால் ககாமே இடையே தொலைபேசி மூலம் உரையாடல்.

Posted On: 05 JUN 2020 7:05PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ருவாண்டாவின் தலைவர் எச்.இ. பால் ககாமேவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

பிரதமர் 2018ஆம் ஆண்டு ருவாண்டாவிற்கு சென்ற மறக்கமுடியாத சுற்றுப்பயணத்திற்கு பின்னர் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்தார். 2018 வருகையின் போது பிரதமர் மோடி பரிசளித்த 200 இந்திய மாடுகளை ருவாண்டா ஜனாதிபதி அன்புடன் நினைவு கூர்ந்தார், மேலும் ருவாண்டன் குழந்தைகளுக்குப் பால் கிடைப்பதை மேம்படுத்துவதில் அவை உதவியதாகவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதாகவும் விளக்கினார்.

கொவிட்-19 தொற்று நோயால் தலைவர்கள் தங்கள் நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து விவாதித்தனர். நெருக்கடியை நிர்வகிக்கவும் குடிமக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அந்தந்த நாட்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மேலும், தற்போதைய நெருக்கடியின் போது ஒருவருக்கொருவர் வெளிநாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும் அனைத்து ஆதரவையும் வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதற்கான ருவாண்டாவின் முயற்சிகளுக்கு மருத்துவ உதவி உட்பட அனைத்திற்கும் இந்தியாவின் உறுதியான ஆதரவை ருவாண்டன் ஜனாதிபதியிடம் பிரதமர் உறுதிப்படுத்தினார்.. ஜனாதிபதி ககாமின் தலைமையின் கீழ் நெருக்கடியைத் திறம்பட நிர்வகிப்பதையும், இந்தச் சவாலை எதிர்ப்பதில் ருவாண்டா மக்களின் உறுதியான தீர்மானத்தையும் அவர் பாராட்டினார்.

தற்போதைய நெருக்கடியின் போது ருவாண்டா மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

*****



(Release ID: 1629875) Visitor Counter : 205