பிரதமர் அலுவலகம்
ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
20 FEB 2026 9:06PM by PIB Chennai
அமெரிக்காவை சேர்ந்த ஓப்பன் ஏஐ ஆய்வு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு சாம் ஆல்ட்மேன் இன்று (பிப்ரவரி 20) பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மகத்தான முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும், திறமை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உலகின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
திறன் வாய்ந்த இளைஞர்களை கொண்ட இந்தியாவில் உலக நாடுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டுமென்று பிரதமர் அழைப்பு விடுத்தார். இது இத்துறையில் மாற்றங்களுக்கு வலுசேர்க்கும் என்று அவர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு மோடி கூறியிருப்பதாவது:
இந்த சந்திப்பு சிறப்பு வாய்ந்தது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் இந்தியா மகத்தான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. திறன் வாய்ந்த இளைஞர்களை கொண்ட இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இது இத்துறையில் மேலும் வளர்ச்சிக்கு உதவிடும்.
***
(Release ID: 2230985)
TV/SV/RK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2235273)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
हिन्दी
,
Manipuri
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam