பிரதமர் அலுவலகம்
தடைகளை நீக்குவதற்காக 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த சீர்திருத்த நடவடக்கைகள் குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
30 DEC 2025 1:16PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டில் தொடர் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்த ஒரு கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். இந்த அமைதியான, ஒருங்கிணைந்த நிர்வாகப் பணிகள், வாராவாரம் தடைகளை சீராக நீக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2025-ல் மேற்கொள்ளப்பட்ட பெரிய சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ள திரு நரேந்திர மோடி, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் முதல் சரக்குப் போக்குவரத்து, எரிசக்தி, சந்தை அணுகுமுறை போன்றவற்றில் மேற்கோள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வரை, இந்தியாவின் வளர்ச்சியானது, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை, நீண்டகால நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் அலுவலகத்தின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி ( @HardeepSPuri ), 2025-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சீர்திருத்தங்கள் குறித்து எழுதியுள்ளார். இது, வாரம் தோறும் தடைகளைத் தொடர்ந்து அகற்றி, அமைதியான முறையில் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நிர்வாகப் பணிகளை குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் முதல் சரக்குப் போக்குவரத்து, எரிசக்தி, சந்தை அணுகுமுறை போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வரை இந்தியாவின் வளர்ச்சியானது, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை, நீண்டகால நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது."
***
TV/PLM/RK/SE
(रिलीज़ आईडी: 2209954)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam