பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிறித்துமஸ் காலை வழிபாட்டில் பிரதமர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 25 DEC 2025 10:43AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தில்லியில் உள்ள கதீட்ரல்  தேவாலயத்தில் நடைபெற்ற கிறித்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டார். "இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணையின் காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறித்துமஸ் பண்டிகையின் உணர்வு, நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நன்மதிப்பையும் ஊக்குவிக்கட்டும்," என்று திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  கூறியுள்ளதாவது:

"டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற கிறித்துமஸ் காலை வழிபாட்டில் கலந்து கொண்டேன். இந்த வழிபாடு அன்பு, அமைதி மற்றும் கருணையின் காலத்தால் அழியாத செய்தியைப் பிரதிபலித்தது. கிறித்துமஸ் பண்டிகையின் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நன்மதிப்பையும் ஊக்குவிக்கட்டும்." இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

"டெல்லியில் உள்ள ‘தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷன்’ தேவாலயத்தில் நடைபெற்ற கிறித்துமஸ் காலை வழிபாட்டின் மேலும் சில காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2208361&reg=3&lang=1            

***

AD/VK/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2208627) வருகையாளர் எண்ணிக்கை : 52