பிரதமர் அலுவலகம்
இந்தியாவின் சமத்துவ காரணியாக தொழில்நுட்பம் மாறியுள்ளது என்பதை குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
Posted On:
19 SEP 2025 12:05PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தொழில்நுட்பம் எவ்வாறு இந்தியாவின் மிகப் பெரிய சமத்துவ காரணியாக இருந்து தெரு வியாபாரிகள் முதல் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை அனைவரையும் மேம்படுத்துகிறது என்பதை குறித்து மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். “இந்தியா ஸ்டேக், யுபிஐ, ஜன்தன்-ஆதார் -மொபைல் முக்கூடல் அம்சம் மற்றும் கோவின் போன்ற முயற்சிகள் மூலம், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கமானது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது, நிர்வாகத்தை மேம்படுத்தியுள்ளது மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது” என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதாவது :
"மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தொழில்நுட்பம் இந்தியாவின் சமத்துவ காரணியாக மாறி, தெரு வியாபாரிகள் முதல் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை அனைவரையும் மேம்படுத்துகிறது என்று எழுதியுள்ளார். இந்தியா ஸ்டேக், யுபிஐ, ஜன்தன்-ஆதார் -மொபைல் முக்கூடல் அம்சம் மற்றும் கோவின் போன்ற முயற்சிகள் மூலம், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கமானது வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளது, நிர்வாகத்தை மேம்படுத்தியுள்ளது மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது."
***
(Release ID: 2168356)
SS/EA/RJ
(Release ID: 2168926)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam