பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

Posted On: 13 SEP 2025 5:04PM by PIB Chennai

மணிப்பூர் மாநிலம்  இம்பாலில் இன்று ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று  தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் என்றும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூர் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்கள் வளர்ச்சியைக் கண்டன, மேலும் அவை லட்சிய மையங்களாக மாறின என்று கூறிய திரு. மோடி, அந்தப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றதாகக் குறிப்பிட்டார். 21-ம் நூற்றாண்டு கிழக்கு மற்றும் வடகிழக்குக்கு சொந்தமானது என்று அவர் மேலும் கூறினார். மத்திய அரசு மணிப்பூரின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருவதாகவும், இதன் விளைவாக மணிப்பூரின் வளர்ச்சி விகிதம் சீராக அதிகரித்து வருவதாகவும் பிரதமர் கூறினார். 2014- க்கு முன்பு, மணிப்பூரின் வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று மணிப்பூர் முன்பை விட பல மடங்கு வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாய்மார்களும் சகோதரிகளும் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் மாநிலம் மணிப்பூர் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இமா கீதெலின் பாரம்பரியத்தை இந்த உண்மைக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக எடுத்துரைத்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பதை இந்தியாவின் மையத் தூணாகக் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

மணிப்பூர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் கலாச்சார வேர்கள் ஆழமானவை மற்றும் வலிமையானவை. மணிப்பூர் இந்தியத் தாயின் முகத்தை அலங்கரிக்கும் ரத்தினம் என்று பிரதமர் கூறினார்.   மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது என்றும், அத்தகைய வன்முறை நமது மூதாதையர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் பெரும் அநீதி என்றும் திரு மோடி கூறினார். அமைதி மற்றும் வளர்ச்சிப் பாதையில் மணிப்பூரை தொடர்ந்து முன்னேற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு மணிப்பூரின் ஊக்கமளிக்கும் பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய தேசிய ராணுவம் முதன்முதலில் இந்தியாவின் சொந்தக் கொடியை ஏற்றியது மணிப்பூரின் மண்ணில்தான் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். மணிப்பூரை இந்தியாவின் சுதந்திரத்திற்கான நுழைவாயில் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிட்டதையும், இந்த மண்ணிலிருந்து வந்த பல துணிச்சலான தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியதையும் அவர் மேற்கோள் காட்டினார்.

இந்தியா உலகளாவிய விளையாட்டு சக்தியாக உருவெடுத்து வருவதால், மணிப்பூரின் இளைஞர்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. அதனால்தான் இந்திய அரசு நாட்டின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு மணிப்பூரைத் தேர்ந்தெடுத்தது என்று பிரதமர் கூறினார்.

மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய எங்கள் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது என்று பிரதமர்  கூறினார், மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். முகாம்களில் உள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்

21-ம் நூற்றாண்டில்வளர்ச்சியடைந்த இந்தியா என்ற  இலக்கை அடைய மணிப்பூரின் வளர்ச்சி தேவைமணிப்பூர் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்தது என்று பிரதமர் தெரிவித்தார்வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நிலைத்திருப்பது அனைவரின் கூட்டுக் கடமை என்று அவர் கூறினார். மணிப்பூர் இந்தியாவின் வளர்ச்சியின் சக்திவாய்ந்த மையமாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.

மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 2166296)

AD/PKV/RJ


(Release ID: 2166351) Visitor Counter : 2