பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் உரையாடினார்

Posted On: 18 JUN 2025 2:56PM by PIB Chennai

கனடாவின்  கனனாஸ்கிஸில் 2025 ஜூன் 17 அன்று நடைபெற்ற 51-வது ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரோனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பல்வேறு விவகாரங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட இரு தலைவர்களும், நமது பூமியின் நலனுக்காக இந்தியாவும் பிரான்சும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்தினர்கள்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“எனது நண்பரான அதிபர் இமானுவேல் மேக்ரோனுடன் உரையாடுவது எப்போதும் மகிழ்ச்சியளிக்கக்கூடியது. பல்வேறு விவகாரங்கள் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். நமது பூமியின் நலனுக்காக இந்தியாவும் பிரான்சும் தொடர்ந்து இணைந்து செயல்படும்.”

***

(Release ID: 2137197 )

AD/IR/AG/KR


(Release ID: 2158933) Visitor Counter : 5