பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் திரு தேவேந்திர சிங் ராணாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 01 NOV 2024 9:14AM by PIB Chennai

 

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற உறுப்பினர் திரு தேவேந்திர சிங் ராணாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர்  குறிப்பிட்டுள்ளதாவது:

“ திரு  தேவேந்திர சிங் ராணாவின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.  மூத்த தலைவரரான அவர் ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக விடாமுயற்சியுடன் உழைத்தவர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதுடன், ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.கவை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். இந்த துயர நேரத்தில்,  அன்னாரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

****

TS/BR/KV

 


(रिलीज़ आईडी: 2069977) आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam