பிரதமர் அலுவலகம்
சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கனக ராஜு மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
26 OCT 2024 10:36AM by PIB Chennai
சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்தவருமான திரு. கனக ராஜு மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஸ்ஸாதி நடனத்தைப் பாதுகாப்பதில் அவரது வளமான பங்களிப்பையும், கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்கள் அவற்றின் உண்மையான வடிவத்தில் தழைத்தோங்குவதை உறுதி செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தையும் திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கனக ராஜு அவர்கள் மறைவு வருத்தம் அளிக்கிறது. குஸ்ஸாதி நடனத்தைப் பாதுகாப்பதில் அவரது வளமான பங்களிப்பு வரும் தலைமுறையினருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும். கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை அவற்றின் உண்மையான வடிவத்தில் செழித்து வளர முடியும் என்பதை உறுதி செய்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி."
*****
PKV/KV
(रिलीज़ आईडी: 2068379)
आगंतुक पटल : 94
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam